Aasaiyaakinen Kovae- ஆசையாகினேன் கோவே

ஆசையாகினேன்,
கோவே! -உமக்
கனந்த ஸ்தோத்திரம், தேவே!

அனுபல்லவி

இயேசுகிறிஸ்து மாசத்துவத்து
இரட்சகா! ஒரே தட்சகா!

சரணங்கள்

  1. வேதா! ஞானப்பர்த்தா!- என்
    நாதா! நீரே கர்த்தா
    மா தாரகம் நீ என்ற
    பரமானந்தா! சச்சிதானந்தா. -ஆசை
  2. கானான் நாட்டுக்கரசே!- உயர்
    வான் நாட்டார்
    தொழும் சிரசே;
    நானாட்டமுடன் தேடி, தேடி
    நாடி பதம் பாடி – ஆசை
  3. வீணாய்க் காலம் கழித்தேன்,-
    சற்றும்
    தோணாமல் நின்று விழித்தேன்,
    காணாதாட்டைத் தேடிச்
    சுமந்த கருத்தே!
    எனைத் திருத்தே. -ஆசை
  4. வந்தனம், வந்தனம் யோவா!
    நீ சந்ததம் சந்ததம் கா வா!
    விந்தையாய் உமைப்
    பணிந்தேன்; சத்ய வேதா!
    ஏசு நாதா. -ஆசை

Leave a Comment