En belanakiya karthave – Song Lyrics

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை

என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
தாங்குதையா உம் கிருபை – நான்
அழுது புலம்பும் நேரமெல்லாம்
அணைக்குதையா உம் கிருபை என்னை

நான் மரண இருளில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
உங்க கோலும் தடியும் தேற்றுதையா
அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா

உம்மாலே ஒரு சேனைக்குள்ளே
பாய்ந்து நானும் சென்றிடுவேன்
உம்மாலே ஒரு மதிலின் மேல்
தாண்டி நானும் சென்றிடுவேன் -நான்

Leave a Comment