En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது

1. என் மனது
துடிக்குது
குலைபதைத்து நோகும்
தேவமைந்தனின் உடல்
கல்லறைக்குப் போகும்.
2.ஆ, அவரே,
மரத்திலே
அறையப் பட்டிறந்தார்
கர்த்தர் தாமே பாவியின்,
சாவத்தைச் சுமந்தார்.
3.என் பாவத்தால்,
என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்;
ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்.
4.என் ஆண்டவர்,
என் ரட்சகர்
வதைந்த மேனியாக
ரத்தமாய்க் கிடக்கின்றார்
என் ரட்சிப்புக்காக.
5.வெட்டுண்டோரே,
ஆ, உம்மையே
பணிந்தேன் ஆவிபேணும்,
ஆகிலும் என் நிமித்தம்,
நான் புலம்பவேண்டும்.
6.குற்றமில்லா
மகா கர்த்தா
உமது ரத்தம் ஊறும்;
மனந்தாபமின்றி யார்
அதைப் பார்க்கக் கூடும்.
7.ஆ, இயேசுவே,
என் ஜீவனே,
நீர் கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக.
8.நான் மிகவும்
எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்,
என் கதியாம் இயேசுவே,
உம்மை வாஞ்சிக்கட்டும்.

Leave a Comment