IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics

இம்மட்டும் என்னை நடத்தினீர்
இம்மட்டும் என்னை தாங்கினீர்
எந்தன் இயேசு நல்லவரே அவர்
என்றுமே போதுமானவர்

எந்தன் பாவ பாரமெல்லாம்
தன் மேலே ஏற்றுக்கொண்டு
எனக்காய் குருசில் மரித்த
எந்தன் இயேசு நல்லவரே

எந்தன் தேவைகள் அறிந்து
வின்வாசல்களை திறந்து
எல்லாம் நிறைவாய் எனக்கு தந்த
எந்தன் இயேசு நல்லவரே

மனபாரத்தின் நேரத்தில்
மனவேதனையின் வேளையில்
மனமுருகி நான் ஜெபிக்கையிலே
எந்தன் இயேசு நல்லவரே

வியாதி நேரத்தில் மருத்துவரே
துக்க வேளையில் ஆறுதலே
கொடும் வெயில்தனில் நிழல் அவரே
எந்தன் இயேசு நல்லவரே

ஒரு போதும் கைவிடாரே
ஒரு நாளும் விலகிடாரே
ஒரு நாளும் மறவாரே
எந்தன் இயேசு உண்மை உள்ளவர்

எந்தன் இயேசு வரும் போது
மார்போடு அணைப்பாரே
சீக்கிரமாய் வருவாரே
நான் அவருடன் சென்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா

Leave a Comment