keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின்

1. கீழ் வான கோடியின்
செம் காந்தி சூரியன்
எழும்பிடும்:
அடியார் ஆன்மத்தின்
நீதியின் சூரியன்
ஆரோக்கியம் சீருடன்
எழும்பிடும்.
2. ராவிருள் நீங்கிற்றே
காந்தியும் தோன்றிற்றே
பூமி தன்னில்
பாவாந்தகாரமும்
எவ்வறிவீனமும்
நீங்கிடத் தோன்றிடும்
எம் நெஞ்சத்தில்.
3. வடிவம் வர்ணமும்
வான் புவி வண்ணமும்
காணுவோமே
உம் சிஷ்டி நோக்கத்தை
உம் ஞான ஜோதியை
உந்தன் நற்பாதையை
காட்டுவீரே.
4. ஜீவ இராசிகள்
நீர் நில வாசிகள்
எழும்பவே:
மகிழ்ந்து மாந்தரும்
வணங்கிப் போற்றியும்
செல்வோம் எம் வேலைக்கும்
எழும்பியே.
5. மன்னாவால் போஷியும்
செல் பாதை காட்டிடும்
இந்நாள் எல்லாம்:
அன்றன்றும் தருவீர்
ஆடை ஆகாரம் நீர்:
மோட்சம் நடத்துவீர்
ஆயுள் எல்லாம்.

Leave a Comment