Kerith Aatru neer – கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் Song lyrics

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு

இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்
உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார்

முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே
அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார்

இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்
மகிமையின் ப்ரசன்னத்தால்
மூடி நடத்திடுவார்

Leave a Comment