Namba Vendam – நம்ப வேண்டாம்

1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்
பொய்யுலகை நம்ப வேண்டாம்;
நேசங் காட்டித் துரோகஞ் செய்யும்
பாழுலகை நம்ப வேண்டாம்
2. உன்னை பெற்ற மாதாவெங்கே?
போஷித்த உன் தந்தையெங்கே?
போய்விட்டாரோ போய்விட்டாரோ
உன்னை விட்டுப் போய்விட்டாரோ?
3. திருடனைப் போல சாவு வரும்
திடுக்கிடுவாய் நீயும் அப்போ;
பாம்பின் வாயில் தவளை போலே
பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்!
4. பிரேதமாகப் பாவி யுன்னை
தூக்கிப் போடுவார் கல்லறைக்கு;
அங்கே உன்னை வைத்திடுவார்
நம்புவாயோ உலகைப் பின்னும்?
5. இயேசு நாதர் பாதந்தேடும்;
மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும்
குருசில் தொங்கும் நேசர் பாரும்
குணமாக்குவார் இப்போ வாரும்

Leave a Comment