Nandri Marandhaen – நன்றி மறந்தேன் Song Lyrics

நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்

உம்மை விட்டு தூரம் போனேன்
உம கரம் பிடித்ததே
உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே

நன்றி ஐயா…. இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி

பாவி என்றென்னை தள்ளி விடாமல்
அணைத்து கொண்டீர் என் தெய்வமே

தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே

Leave a Comment