PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி

1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி

2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புற சாதியாம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரண் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் – பாடி

3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர் ,
எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் – பாடி

Leave a Comment