Paaviyae Saaukku Theevirithu – பாவியே சாவுக்குத் தீவிரித்து

1. பாவியே சாவுக்குத் தீவிரித்து
தூய இரட்சகரின் வேண்டுதலை
தீய மனதுடன் தள்ளி, நீயும்
தூரம் போகாதே கிருபை விட்டு!
பல்லவி
வந்திடு இயேசு மந்தையில் நீ
தந்திடுவாய் சிந்தைதனை;
இங்கிதம் பாட பாவியே நீ
வந்திடு இயேசுவிடம்
2. அன்பா யழைத்தார் பல தடவை
இன்னும் நின்றாத்துமம் தட்டுகிறார்!
உன்னோடு வாழ இடங்கொடென்ற
முன்னவன் வேண்டுதல் தட்டிடாது – வந்தி
3. பேரொளி மன்னிப்பின் நாட் செல்லுதே
சேரும் விண் வாசலடைகின்றதே!
தாரணி விட்டுதான் நீங்கிடுவாய்
சார்ந்திடு இயேசுவின் பாதத்தில் நீ! – வந்தி

Leave a Comment