Ratchithaar Paaviyana Ennai – இரட்சித்தார் பாவியான என்னை

1. இரட்சித்தார், இரட்சித்தார்
பாவியான என்னை;
நீக்கினார் பாவத்தை
தம் திவ்விய இரத்தத்தால்
பல்லவி
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! இரட்சகர்க்கு!
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! ஆமென்
2. அன்பினால், அன்பினால்
அவர் அருளின
வாக்குத் தத்தங்களில்
நம்புவேன், நம்புவேன் – அல்லேலூயா
3. சுத்த இதயத்தை
எனக்குள் சிருஷ்டித்தார்
சோதனை பயத்தை
நீக்கினார், நீக்கினார் – அல்லேலூயா
4. பெலன் அற்றிருந்தேன்
அவர் பெலன் தந்தார்
இருள் எல்லாம் மாற்றி,
ஒளியையுந் தந்தார் – அல்லேலூயா

Leave a Comment