Searvatheppothu Paavi – சேர்வதெப்போது பாவி

பல்லவி
சேர்வதெப்போது பாவி – சொர்க்க இன்பத்தை
சேர்வதெப்போது பாவி – மோட்ச இன்பத்தை
சேர்வதெப்போது பாவி?
சரணங்கள்
1. ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல்
காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் – சேர்
2. அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்து
இரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் – சேர்
3. பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக்
கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் – சேர்
4. திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான்
உருக்கமுள்ள இயேசுவின் திருக்கரம் வையாவிடில் – சேர்
5. உள்ளத்தைத் திறந்து நீ உண்மையை அறியாமல்
கள்ளத்தனம் பண்ணிக் காலத்தைக் கழித்தால் – சேர்
6. இரட்சகர் வந்துன்னை இரட்சிக்க நிற்கும்போது
கட்சி பண்ணிக்கொண்டு துஷ்டனாக அலைந்தால் – சேர்

Leave a Comment