Ulagam Un sathamentru -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே

பல்லவி
உலகம் உன் சதமென்று எண்ணியிராதே!
பலவித பாவத்தின் வலையிற் சிக்காதே
சரணங்கள்
1. மாதா பிதா மற்றும் செல்வமிருந்தாலும்
மரணம் வந்து உந்தன் வாழ்வைக் குலைக்கும் – உல
2. சாவின் கோரக்காட்சி நெருங்கையில்
பாவி நானென் செய்வேனென்று திகைப்பாய் – உல
3. நரகத்தின் புழுக்களும் நெருப்பு மட்டுமல்ல
பரலோகக் கீதங்களுன்னை வதைக்கும் – உல
4. பாவ விமோசனம் இப்போதே பெறுவாய்
தாவியுன் மீட்பரின் பாதத்தைத் தேடு – உல

Leave a Comment