Ulagayor Nilai yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே

பல்லவி
உலகையோர் நிலையென்றெண்ணாதே க்ஷணம்
ஒழிந்து போம் உன்னோடோரடியும் வராதே!
அனுபல்லவி
பலமாகப் பொக்கிஷம் பரத்திலே தேடு
பத்திரமாயங்கு இருக்குமே நீடு
சரணங்கள்
1. நிலையாது செல்வம் எந்நாளும் – அவை
நீர்க் குமிழ்கள் போல நிமிஷத்தில் நையும்
உலையில் மெழுகுபோல் உருகுமே மெய்யும்
உந்தனின் ஜீவனைப் பிரிக்குமே வீயும் – உல
2. தீரம் புகழ் கீர்த்தி நாசம் – மற்றும்
சேயர், மனைவி சிநேகிதர் வேஷம்;
தாரணி முற்றுமே தவிர்த்திடல் மோசம்;
சார்ந்திடில் ஆன்மாவுக்கென்றுமே தோஷம் – உல
3. வானத்தின் கீழ் யாவும் பண்டு – சாலமோன்
மாயை என்றுரைத்ததை மறவாதே கண்டு;
இதய வுடைவோடு இயேசுவை அண்டு
இன்பலோக நித்திய பேரின்பம் உண்டு! – உல

Leave a Comment