1. வாழ்க, நேசமுள்ளோரே!
இனம் இனம் யாருமே,
களிப்புடன் கூடுங்கள்,
வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள்.
2. கர்த்தர் தாமே ஆதியில்
பாவம் இல்லாக் காலத்தில்
தந்தை தாயை நேசமாய்
சேர்த்திணைத்தார் ஏகமாய்.
3. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்
ஐக்யமாக்கி, தயவாய்
இல்லறத்தின் வாழ்விலே
பாதுகாரும் யேசுவே.