Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே

1 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரி வாய்;
உதய நசஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.
2 தண் பனித் துளிகள் இலங்கும் போது,
முன்னணையில் அவர் தூங்குகின்றார்;
வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்.
3 ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?
4 எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்,
மீட்பர் கடாசஷம் பெறல் அரிதே;
நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்;
ஏழையின் ஜெபம் அவர்க் கருமை.
5 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;
உதய நசஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

Leave a Comment