Yeathean Paavam Neengidum – ஏதென் பாவம் நீக்கிடும்

1. ஏதென் பாவம் நீக்கிடும்
இரட்சகரின் இரத்தந்தானே!
ஏது சுத்தமாக்கிடும்?
இரட்சகரின் இரத்தந்தானே!
பல்லவி
மெய்யாம் ஜீவநதி!
பாவம் போக்கும் நதி!
வேறே நதியில்லை
இரட்சகரின் இரத்தந்தானே!
2. என்னைச் சுத்திகரிக்கும்
இரட்சகரின் இரத்தந்தானே!
மன்னிப்பெனக்களிக்கும்
இரட்சகரின் இரத்தந்தான! – மெய்
3. ஏதும் பாவம் போக்குமோ?
இரட்சகரின் இரத்தந்தானே!
என் கிரியை செல்லுமோ?
இரட்சகரின் இரத்தந்தானே! – மெய்
4. அல்லேலூயா பாடுவேன்,
இரட்சகரின் இரத்தந்தானே!
ஆனந்தம் புகழுவேன்,
இரட்சகரின் இரத்தந்தானே! – மெய்

Leave a Comment