kakkum karangal undenakku Tamil christian song lyrics

காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப் பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை

நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என்மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்

கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகுபோல எழும்பிடுவாய்

அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டு மந்தை முதலற்றாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

Leave a Comment Cancel Reply

Exit mobile version